Sunday, April 14, 2019

நாய்ப்பிழைப்பு


வாய்க்கவே கூடாது நமக்கு
வரும் பிறவிகளில் அவர்கள் பிறப்பு.
வாய்ப்பொன்றை கேட்க வாலாட்டி
வசதிவந்த பின்னும் கைகள் நீட்டி
வழிமறக்கும் மனிதப்பிழைப்பு மட்டும்
வாய்க்கவே கூடாது நமக்கு.
செயல்களெல்லாம் எமை விஞ்சும்படி சிறப்பாய் அவர்கள் செய்வர்.
காலை நக்குதல்,வாலாட்டுதல்
கண்டபடி குரைத்தல்,கடித்தல் என
எல்லாவற்றையும் அவர்கள் செய்வர்-பின்
நாய்க்குணம் என்று நம் பெயர்தனை அவர்கள் பாவிப்பர்.
எல்லாவற்றையும் எங்களிடமிருந்து பெற்றவர்கள்
ஒன்றைமட்டும் இன்னும் கொண்டுபோகவில்லை.
நன்றிமறவா தன்மை தான் உண்மையில் நாய்கள் நம் குணம்.
அன்றே மறந்திடும் அபூர்வமே அவர்கள் குணம்.
அந்த ஒன்றில் நாம் அவர்களைக்காட்டிலும் என்றும் உயர்வே
இந்த ஒன்றுபோதும் எந்தன் நண்பா.
சொந்த இடமின்றியும் சொத்துசுகம் இன்றியும்
வங்குரோத்து அரசியல் வானை பிளக்கும் அறிவியல்
டெங்கு நோயின் தீவிரம் தங்கவிலையில் சேதாரம்
இந்த வகையில் துன்பங்கள்
எந்த நோவும் இன்றியே
கொஞ்சம் ஓய்வும் மிஞ்சும் உழைப்பும் கொண்டு நாமும் பயணிப்போம்.
திரும்பவும் ஒரு தேர்தலில் அவர்கள்
தங்களில் பெரியவர் யார் என தேடட்டும்.
பாவம் கடைசிவரைக்கும் அவர்கள் தங்களில் "மனிதரை" தேடுவதேயில்லை.
-பிரகவி.

No comments:

Post a Comment