லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்
கொஞ்சமே என்றாலும் கொடுத்துண்.
நஞ்சினை தலைக்கும் மண்தரைக்கும் சேர்க்காதே
வெஞ்சினம் அகற்று வேறோர் உலகம் நிறுவு.
கொஞ்சமாய் பேசு கூடியிருந்து பயன்பெறு.
நெஞ்சம் நிறைந்தொரு நேசம் செய்
நீதியை கொண்டொரு தேசம் செய்
வியர்வை வரும்வரை வேலை செய்
வியாதி தீர்ந்திடும் ஒரு நாளைச்செய்.
பஞ்சம் அகற்ற பயிர்செய்
பஞ்சினும் மென்மைபோல் உயிர்செய்.
நெஞ்சம் துணிந்து நின்றிட பழகு
நீயாய் நடந்திட பாதை நிர்மாணி.
எஞ்சும் எண்ணிக்கை குறைவெனினும்
எடுத்த இலக்கை அடைந்தே ஓய்வெடு.
மிஞ்சும்படி உனக்கிங்கு எதுவுமில்லை-பலர்
விஞ்சும்படி உந்தன் வினையாற்று- விதிமாற்று.
-பிரகவி.
Sunday, April 14, 2019
லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment