Sunday, April 14, 2019

சக்தி தரும் பராசக்தி

சக்தி தரும் தேவிகளின் திருவிழா இது.
பக்தியுடன் போற்றி இங்கே பணிந்திடுவோம் வாரீர்.
இச்சா சக்தி, கிரியா சக்தி ஞானா சக்தி
இவை மூன்றும் கொண்டவள் அன்னை பராசக்தி.
எமக்காக அவளிங்கு வடிவெடுத்தாள் மூன்றாய்.
எம்வாழ்வும் வளமாகும் அவளருளில் நன்றாய்.

மகிஷனை வதம்செய்தாள் எங்கள் பெரும்தேவி.
மண்ணோடு மாண்டிட்டான் அந்த பெரும்பாவி.
அந்நாளை திருநாளாய் ஆக்கியிங்கே நாம்
ஆராதனை செய்வோம் அன்னையவள் நாமம்.

வீரமும் தைரியமும் தருபவள் துர்க்கை
செல்வமும் செழிப்பும் தருபவள் லக்ஷ்மி
கல்வியும் கலைகளும் தருபவள் சரஸ்வதி
மூவரை போற்றியே மும்மூன்று நாட்களாய்
தேவியர் புகழ்பாடும் திருநாளே நவராத்திரி.

அழியாச்செல்வமும் ஆயகலைகளும்
துணிவுடன் வீரமும் தூய கல்வியும்
பொழியச்செய்யும் எம்பெருந்தேவியர்.
இவர்களை போற்றி இறைவராய் ஏற்றி
அவனியில் நாமும் இன்புற்று வாழ்வோமே.
-பிரகவி.


No comments:

Post a Comment