Sunday, November 15, 2015

டெங்கு

 

நலம் வாழ

பரிசோதனை ரகசியங்கள் 9: டெங்கு காய்ச்சலுக்கு என்ன பரிசோதனை?

Updated: November 14, 2015 13:15 IST | டாக்டர் கு. கணேசன்

   

மழைக்கால மாதங்களில் இந்திய மக்களை அலற வைக்கும் நோய்களில் டெங்குவுக்கு முக்கிய இடமுண்டு. ‘டெங்கு' (Dengue) எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் இந்தக் காய்ச்சல் வருகிறது. இவற்றைச் சுமந்து திரியும் ‘ஏடிஸ் எஜிப்தி' (Aedes Aegypti) எனும் கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போது கிருமிகள் பரவி, நோய் உண்டாகிறது.

அறிகுறிகள்

கடுமையான காய்ச்சல், வயிற்றுவலி, தாங்க முடியாத அளவு தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, தொடர்ச்சியான வாந்தி, களைப்பு ஆகியவை டெங்குவுக்கே உரிய அறிகுறிகள். எலும்புகளை முறித்துப் போட்டதுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது, இந்த நோயை இனம்காட்டும் முக்கிய அறிகுறி. வாந்தியும் வயிற்றுவலியும் ஆபத்தான அறிகுறிகள். அடுத்து உடலில் அரிப்பு ஏற்படும், சிவப்புப் புள்ளிகள் தோன்றும்.

ஆபத்து எப்போது?

பெரும்பாலோருக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சிநிலை (Dengue Shock Syndrome) உருவாகும். இப்படியானால் ஆபத்து அதிகம். இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும்; சுவாசிக்கச் சிரமப்படுவார்கள்; ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும்.

பொதுவாக இந்தக் காய்ச்சல் முதல்முறையாக வரும்போது ஆபத்து வராது; இரண்டாம் முறையாக வரும்போதுதான் ஆபத்து வரும். கைக்குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இது ஏற்படுமானால் ஆபத்து விரைவில் வந்துசேரும்.

என்ன சிகிச்சை?

டெங்கு நோய்க்கென்று தனியாகச் சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை. டெங்கு தானாகத்தான் சரியாக வேண்டும். அதுவரை ரத்தக்கசிவு, குறை ரத்தஅழுத்தம், மூச்சிளைப்பு போன்ற ஆபத்தான விளைவுகளைக் கட்டுப்படுத்தவே சிகிச்சை தரப்படும். எனவே, டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, இந்த ஆபத்தான பின்விளைவுகள் வரவிடாமல் தவிர்க்க வேண்டியது முக்கியம்.

என்ன பரிசோதனை?

1. என்.எஸ். 1 ஆன்டிஜென் (Non Structural 1 Protein அல்லது NS1 antigen) பரிசோதனை.

# நோயாளியின் ரத்தத்தில் டெங்கு கிருமிகளுக்கான ஆன்டிஜென் உள்ளதா எனக் கண்டறியும் பரிசோதனை.

# பரிசோதனை செய்த ஒரு மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும்.

# என்.எஸ். - 1 ஆன்டிஜென் இருந்தால் அவருக்கு டெங்கு உள்ளதாகச் சந்தேகிக்கப்படும்.

# குறிப்பிட்ட ஒரு பகுதியில் டெங்கு தீவிரமாகப் பரவும்போது அதிக எண்ணிக்கையில் உள்ள நோயாளிகளைப் பரிசோதனை செய்ய இது உதவுகிறது.

# காய்ச்சல் தொடங்கிய மூன்று நாட்களுக்குள் இதைச் செய்துகொள்ள வேண்டும்.

# ஆனால், இதன் முடிவு 62 சதவீதம்தான் சரியாக இருக்கும்.

# நோயை உறுதிப்படுத்த மற்ற பரிசோதனைகள் அவசியம்.

2. டெங்கு ஐ.ஜி.எம். மற்றும் ஐ.ஜி.ஜி. (Dengue IgM, IgG) பரிசோதனைகள்,

# ரத்தத்தில் டெங்கு ஐ.ஜி.எம். மற்றும் ஐ.ஜி.ஜி. எதிர் அணுக்கள் (Antibodies) இருக்கின்றனவா எனக் கண்டறியும் பரிசோதனை இது.

# காய்ச்சல் ஏற்பட்ட நான்கு நாட்கள் கழித்து ஒரு வாரத்துக்குள் இதைச் செய்துகொள்ள வேண்டும்.

# நோயாளிக்கு டெங்கு பாதிப்பு முதல்முறையாக இருந்தால் ஐ.ஜி.எம். அளவு அதிகமாகவும் ஐ.ஜி.ஜி. அளவு குறைவாகவும் இருக்கும்.

# டெங்கு பாதிப்பு மறுமுறையாக இருந்தால் ஐ.ஜி.எம். அளவு குறைவாகவும் ஐ.ஜி.ஜி. அளவு அதிகமாகவும் இருக்கும்.

3. எலிசா (ELISA) பரிசோதனை

# இதுவும் ஐ.ஜி.எம். எதிர் அணுக்களைக் கண்டறியும் பரிசோதனைதான்.

# அதிநவீனத் தொழில்நுட்பத்தைக் கொண்டது.

# நோய் ஏற்பட்ட பத்து நாட்களுக்குப் பிறகுகூட, இதைச் செய்துகொள்ளலாம்.

# செலவு அதிகம்.

# நோயை 90 சதவீதம் உறுதிப்படுத்தும்.

# நோயாளிக்கு டெங்கு பாதிப்பு முதல்முறையாக இருந்தால் ஐ.ஜி.எம். அளவு அதிகமாகவும், மறுமுறை தாக்குகிறது என்றால் இதன் அளவு குறைவாகவும் இருக்கும்.

4. ஆர்.டி. - பி.சி.ஆர். (RT - PCR) பரிசோதனை

# ரத்தத்தில் டெங்கு வைரஸின் ஆர்.என்.ஏ. மூலக்கூறுகளையும் ரிவெர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் (Reverse Transcriptase) எனும் என்சைமையும் கண்டுபிடித்து நோயை நிர்ணயிக்கும் பரிசோதனை இது.

# 90 சதவீதம் மிகச் சரியாக நோயைக் கணிக்க உதவுகிறது.

# மிக நுணுக்கமான தொழில்நுட்பத்தைக் கொண்டது.

# நோய் ஆரம்பித்த 24 மணி நேரத்தில் நோயை உறுதி செய்துவிடும். இதன் செலவும் கொஞ்சம் அதிகம்தான்.

5. ரத்த அணுக்கள் பரிசோதனை

# இப்பரிசோதனைப்படி, டெங்கு நோயாளிக்கு ரத்த வெள்ளையணுக்கள் குறைவாக இருக்கும்.

# அடுத்து, ஹெமட்டோகிரிட் (Haematocrit - HCT) எனும் பரிசோதனை முக்கியமானது.

# இது, ரத்தச் சிவப்பணுக்களின் கன அளவு எத்தனை சதவீதம் இருக்கிறது என்பதைப் பரிசோதிப்பது.

# இதன் இயல்பான அளவு 36 - 38 சதவீதம்.

# காய்ச்சல் ஆரம்பித்த முதல் மூன்று நாட்களில் இந்த அளவு சரியாக இருக்கும். அதற்கடுத்த இரண்டு நாட்களில் இதன் அளவு அதிகரித்தால் டெங்கு என்று கணிக்கப்படும்.

# சிகிச்சையைத் தொடங்குவதற்கும் நோய் கட்டுப்படுகிறதா என்று கணிப்பதற்கும் இது உதவுகிறது.

# எனவே, குறிப்பிட்ட இடைவெளிகளில் இதை மறுபடியும் செய்துகொள்ள வேண்டும்.

6. தட்டணுக்கள் பரிசோதனை

# தட்டணுக்களின் (Platelets) சரியான அளவு 1.5 4.5 லட்சம்/டெ.லி.

# டெங்கு ஆரம்பித்த முதல் இரண்டு நாட்களுக்கு இது சரியாக இருக்கும். அதற்கடுத்த மூன்று நாட்களில் இதன் அளவு குறையத் தொடங்கி ஆறாம் நாளில் மிகவும் குறைந்துவிடும். ஆனால், ஏழாம் நாளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.

# டெங்கு நோயாளிக்கு ரத்தம் அல்லது தட்டணுக்களைச் செலுத்த வேண்டுமா எனத் தெரிந்துகொள்வதற்கு இது உதவுகிறது.

7. வைரஸ் கிருமி வளர்ப்புப் பரிசோதனை (Virus culture test)

# இதன்மூலம் டெங்கு வைரஸை நேரடியாகக் கண்டறிந்து நோயை நிர்ணயிக்க முடியும்.

# காய்ச்சல் ஆரம்பித்த முதல் மூன்று நாட்களில்கூட நோயை 100 சதவீதம் உறுதிப்படுத்த முடியும்.

# செலவு அதிகம்.

# இந்த வசதி வேலூர், சென்னை, புனே போன்ற பெருநகரங்களிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் மட்டுமே உள்ளது.

முக்கியக் குறிப்பு

# டெங்கு ஐ.ஜி.எம், ஹெமெட்டோகிரிட் மற்றும் தட்டணுக்கள் பரிசோதனைகளை நோயாளிக்குக் காய்ச்சல் குறைந்த பிறகு, அதாவது நோய் ஆரம்பித்த இரண்டாவது வாரத்தில் மீண்டும் செய்ய வேண்டும்.

# இவை அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே நோய் சரியாகிவிட்டது என்ற முடிவுக்கு வர முடியும்.

# ஒருவருக்குக் காய்ச்சல் ஒரு வாரத்துக்கு மேல் நீடித்தால், அவருக்கு டெங்கு காய்ச்சல் இல்லை எனக் கொள்ளலாம்.

Friday, October 16, 2015

Nature

இயற்கை - ரசிக்கையில் எத்தனை அழகு.

Thursday, October 1, 2015

கோபுர அழகு.

காலைப்பொழுதொன்றில் குடியிருக்கும் வீட்டருகே கோபுர அழகு.

Wednesday, September 30, 2015

சர்வதேச சிறுவர் தினம்.

இனிய காலை மலர்ந்திருக்கிறது எல்லோருக்கும் இந்த நாள் இனிய சந்தோசமான நாளாக அமைய இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு இன்றய நாள் ஒரு முக்கியமான நாள்.எங்கள் மத்தியில் இருக்கின்ற எங்களோடு  வாழுகின்ற இரு வேறு வயதினரை நினைவுகூருகின்ற நன்னாள்.ஆம் இன்று சர்வதேச குழந்தைகள்  தினம் மற்றும் சர்வதேச முதியோர் தினமும்கூட. நாங்கள் நிறையவே கவனிக்கவேண்டியவர்களாக இருக்கின்றவர்களை நினைக்கின்ற தினம். இந்த இடத்தில் உங்கள் சிந்தனைக்கு ஒரு சின்ன கதை ஒன்றை சொல்லலாம் என்று நினைக்கின்றேன்.சீன தேசத்திலே ஒரு காட்டுப்பிரதேச ஊரில் ஏழைக்குடிசையிலே ஒரு தகப்பனும் அவருடைய சின்ன மகனும் வசித்து வந்தனர்.ஒரு நாள் அந்த இடத்திலே ஏற்பட்ட காட்டுத்தீ அனர்த்தத்திலே  அவர்களுடைய வீட்டின் கூரை எரிந்து சாம்பலாகிவிட்டது.ஏழையான அந்த தகப்பன் செய்வதறியாது நம்பிக்கை இழந்து சோகமாயிருந்தார்.ஆழ்ந்த யோசனையிலிருந்தவர் தன் பிள்ளையின் புத்தகத்தின் பின் புறத்திலே தன்சோகத்தை இவ்விதமாய் எழுதினார் " எரிந்தது வீடு இனி........ என்று ஏக்கத்தோடு அதை முடிக்காமல் போய்விட்டார்.தன் அப்பாவின் கவலையை உடனிருந்து பார்த்த அந்த சின்ன மகன் அந்த வசனத்தை அவரை ஆறுதல் படுத்தும்படியாய் முடித்து வைத்தான்.வெளியில் சென்று வந்த தந்தை மீண்டும் அந்த புத்தகத்தை பார்த்தபோது  ஓடிப்போய் தன் மகனைக்கட்டிக்கொண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டார். அந்த சின்ன பையன் இவ்விதமாய் எழுதியிருந்தான் " எரிந்தது வீடு இனி.....
தெளிவாய் தெரியும் நிலா" இவ்வளவு நாளும் எங்கள் வீட்டின் ஓலைக்கூரையின் சிறு ஓட்டைக்குள்ளாக அரைகுறையாக தெரிந்த நிலா இனி முழுமையாய் தெளிவாய் தெரியப்போகிறது என்ற சந்தோசத்தை ஒரு புது நம்பிக்கையை இன்னல்களிலிருந்தான நம்பிக்கையின் வெளிச்சத்தை அந்த சின்னமகன் தன் தந்தைக்கு கொடுத்தான். இந்த நம்பிக்கையை தான் இன்று எம்பிள்ளைகள் எமது முதியோர் எம்மிடம் எதிர்பார்க்கின்றனர். சிறுவர் தினமும் முதியோர் தினமும் ஒரே நாளில் கொண்டாடப்படுவதன் காரணத்தை நீங்கள் அறிந்ததுண்டா.நிறையவே இருப்பினும் மிக முக்கியமான காரணமாக சொல்லப்படுவது இவ்இரு வயதினரும் மற்றவர்களில் தங்கி வாழ்கின்றவர்களாக விசேட கவனிப்பிற்குரியவர்களாக, பாதுகாப்பு தேவைப்படுபவர்களாக இருப்பதேயாகும்.இன்னும் சொல்லப்போனல் முதுமை என்பது இன்னுமோர் மழழைப் பருவமே.
இவ்வாறானதொரு தினம்
அனுஷ்டிக்கப்படுவதற்கான
காரணம்
சிறுவர்களுக்கெதிராக
அரங்கேற்றப்படுகின்ற
துஷ்பிர யோகங்ளையும்
அநீதிகளையும்
இயன்றளவு குறைத்து
அவர்களுக்கான சகலவி
தமான உரிமைகளையும்
பெற்றுக் கொடுப்பதேயாகும் .
இன்றையஉலகம் எதிர் நோக்கும்
மிக முக்கிய சமூகப்
பிரச்சினைகளுள்
ஒன் றாக சிறுவர் மீதான
துஷ்பிர யோகம்
விளங்குகின்றது. சிறுவர்
துஷ்பிரயோகம்
என்ற விடயமானது
வளர்ச்சி அடைந்த மற்றும்
வளர்ச்சி
அடைந்து வரும் நாடுகள் என்ற
எந்தவித
வேறுபாடுகளுமின்றி உலகம்
முழுவதும் காணப்படும்
சர்வதேசத்தின்
கவனத்தை ஈர்த்த
பிரச்சினையாக இருந்தாலும்
கூட வளர்ச்சி அடைந்து வரும்
நாடுகளில் அது ஒரு பாரிய
பிரச்சினையாக
உருவெடுத்து வருகின்றது .
சிறுவர்கள் என்போர்
மனித சமூகத்தின் மிக முக்கிய
பகுதியினராகக்
கருதப் படுகின்றனர் .
அத்தோடுஅவர்கள் அடுத்தவர்
களில் தங்கிவாழ்கின்ற
பலவீனர்களாகக்
காணப் படுவதனாலேயே
அவர்களது உரிமைகள்
அதிகம் மீறப்படுகின்றன .
இவ்வாறான உரிமைமீறல்கள் ,
துஷ்பிரயோகங்களில்
இருந்தும்
சிறுவர் களைப் பாதுகாப்பத காகப் பல கொள்கைகள் மற்றும்
பிரகடனங்கள்காலத்துக் குக் காலம் வெளியிடப்பட்டு
வந்துள்ளன.
அவற்றிடையே 1989 இல் ஐ .நா .
சபையில் வெளியிடப்பட்ட
சிறுவர் உரிமைகளைப் பற்றிய
கொள்கையானது
சிறுவர்களைப்
பாதுகாத்தல் தொடர்பாக
குறிப்பிடத்தக்க
அளவு ஏற்பாடுகளை கொண்
டுள்ளது.
மேலும் ஐ. நா சபையானது 18
வயதுக்குட்பட்ட
அனைவரையும்
சிறுவர்கள் என வரையறுத்
துள்ளது .
சிறுவர்கள் எதிர்கால உலகின்
அத்திவாரம்
என்ற வகையில்
அவர்களது எதிர்காலத்தைச்
சிறப்பாக்கத் திட்டமிட்டு
வழிநடத்த வேண்டும். எமது நாட்டிலும் சிறுவர்களிற்கெதிராக நிகழ்தேறிக்கொண்டிருக்கும் வன்முறைகளை நாம் நாளாந்தம் அறிந்தவண்ணமே இருக்கின்றோம். இவற்றிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான உரிய இறுக்கமாக சட்டங்களை அமுல்படுத்துவதன்மூலமும் வன்முறையாளர்களிற்கு சரியான தண்டனைகளை பெற்றுக்கொடுப்பதன் மூலமும் சிறுவர்கள் எங்களிடம் எதிர்பார்க்கின்ற பாதுகாப்பை நம்பிக்கையை நாம் வழங்க முடியும். சிறுவர்கள் மட்டில் அவர்களிற்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் தொடர்பிலும் அறிந்திருக்க வேண்டும். அவர்களை அவர்களது திறமைகளை மதிக்க வேண்டும்.
உரிய வயதில் உரிய கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அவர்களுக்குள்ள உரிமைகள் அவர்களுடைய கடமைகள் தொடர்பில் அவர்களிற்கு போதிக்கவேண்டும்.
பண்பாக நடத்தவேண்டும்.கண்ணியமாக இன்சொல்லால் அவர்களுடன் பேச வேண்டும்.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது.
மற்றவர்கள் முன்பு தண்டிக்கவோ கண்டிக்கவோ கூடாது.
ஆடைகளின் நேர்த்தி பற்றி கற்றுக்கொடுக்கவேண்டும். பெற்றோராக ஆசியராக ஒவ்வொரு பிள்ளையிலும் அக்கறை கொள்ளும் ஒருவராக நீங்கள் இருக்கவேண்டுமாயின் முதலில் அவர்களுடன் பேசவேண்டும்.அவர்களுக்குள்ள தேவைகள் தொடர்பில் அவர்களிற்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிய வேண்டும். அப்போது அவர்களிடத்தில் ஒரு நம்பிக்கை உங்கள் மீது உருவாகும்.மதிப்பு ஏற்படும். இதை நீங்கள் அவர்களிடத்தில் உணரும் தருணம் அவ்வளவு அழகானது.உருவாக்குங்கள் இன்று இந்த நல்ல நாளில் சபதமெடுங்கள் உங்கள் வகுப்பறையிலிருந்து புறப்படும் ஒவ்வொரு பிள்ளையும் உலகை வெல்ல உருவாக்குங்கள்.நல்ல சிந்தனைகளை கற்றுக்கொடுங்கள்.கண்ணியத்தை நீதியை நல்ல கல்வியை நம்பிக்கையை நேசத்தை பெற்றுச்செல்ல அவர்களை வழிநடத்துங்கள்."நல்ல மனிதர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்." நன்றி வணக்கம்.     
                     பேரன்புடன் பிரகலாதன்.

அழியாக்காதல்

நேற்றிரவு ஓர் கனவு
நீதான் அங்கும் நின்றிருந்தாய்.
நீலக்கண்ணில் நிலவும் நானும் தெரிந்தோம்
நீதான் கேட்டாய் நிலவை நோக்கி
நாங்கள் உலவுமிடத்தில் உனக்கென்ன வேலை என்று.
நிலவோ மௌனம் நான் தான் பதில் தந்தேன்
உலவும் இடத்தில் உன்னோடு துணைவர
உன் அழகில் இல்லையெனினும் ஓரளவில் அழகாய் ஒரு தோழி உண்டென்றால் உனக்கும் ஓர் துணிவென்றேன்.
உன் நீள்விழிப்பார்வை வாள் என வீசி பின் வாய் மலர்ந்தாய்.
உன் மேல் நான் கொண்ட நம்பிக்கையே என் ஒரே துணிவும் துணையுமென்றாய்
மறுமொழி ஒரு மொழி பேச துணிவின்றி தூங்கிவிட்டேன்.
அர்த்தசாமத்திலும் அழியாக்காதலின் அர்த்தம் அழியவில்லை அழகாய் சொன்னாய் 'நம்பிக்கை அதானே எல்லாமே' .                                         
                                              ..பிரகலாதன்.
                                                28.09.2015

Wednesday, September 23, 2015

பொறுமை தரும் பெருமை.

பொறுமை கடலினும் பெரிது
தருமே மனிதரில் தனிச்சிறப்பு.
பெருமை இதன் வழி வருமே
இரண்டும் மனதிற்கிதமே.

பொறுமையை பொதுக்குணமாய் கொண்டு விடு
பூமியைக்கூட நீ ஆண்டு விடு
பணிவினை உன்னிடம் செதுக்கிக்கொள்
பெருமையை ஓர் பதக்கமாய் கொள்.

புறந்தள்ளும்போதும் பொறுமை கொள்- பின்
புதையலாய் வெளிப்பட்டு பெருமை கொள்.
அறந்தாண்டி நடப்போர்க்கும் அதிகாரம் வகிப்போர்க்கும்
அழிவுண்டு என்பதை அடிக்கடி நினைவூட்டும் உன் பொறுமையும் பெருமையும்.

தோழனே துயர்விலக்கு தோல்வியிலும் மிஞ்சியுண்டு ஓர் இலக்கு
நாளைய வெற்றிக்கு அதுதான் விளக்கு
துணிவைச்சேர் தொடர்ந்து பணி செய்
சாமியே தோற்கும் உன் சகிப்பில் பூமியும் தோற்கும் பகை தன் பிழை ஏற்கும்
தோழனே துயர்விலக்கு தோல்வியிலும் மிஞ்சியுண்டு ஓர் இலக்கு
நாளைய வெற்றிக்கு அதுதான் விளக்கு.        
                      ஆர்.ஜே.பிரகலாதன்.

Tuesday, June 2, 2015

புகையில்லா தே(ச/க)ம்

புகை உண்ட தேகம் பகைமூண்ட தேசம்
வலி தந்தே தீரும் பலி கொண்டே ஆறும்
மிகையான எதுவும் உயிரின் பகையாக மாறும்
தொகையான புகையால் உடலெங்கும் நாறும்.

மூச்சோடு இழுக்கின்ற புகை உள்ளே போகும்- முழு
வீச்சோடு இயங்கும் கலம் இயங்காமல் போகும்
பேச்சோடு செயல்கள் யாவும் மிக தாமதமாய் ஆகும் -சிறு
காய்ச்சலிற்கும் உடல் இப்போ தாங்காது போகும்.

போன புகை புற்றுநோயுடன் பேச்சு வார்த்தை தொடங்கும்
ஆனமட்டும் உடலும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் தொடங்கும்
ஆடுமட்டும் ஆடியவன் ஆண்மை குறைய தொடங்கும்
ஆதரிக்க யாருமின்றி அவன் உயிரதுவும் அடங்கும்.

புகை நுழைவது சுலபம் உடலில் விளைவது கலகம்
புகை கொண்ட வாழ்வால் இருண்டிடும் உலகம்
புகை கண்டு உந்தன் புன்னகையும் விலகும்
புற்றுநோயொன்றே உன் ஒரே உறவாய் பழகும்.

இழுக்கின்ற புகையால் முகம் பழுத்திங்கே போகும்
புழுத்தின்ற பழம் போலே கலம் யாவும் புழுத்திங்கே போகும்
பளிச்சிடும் பல்மேல் காவி படிந்திங்கு போகும்
வலிமிகும் உடலெங்கும் ரணமாகி போகும்

உட்சென்ற புகை மெல்ல உடலதை உருக்கும்
வெளிவரும் புகையால் உதடுகூட கறுக்கும்
ஒரு விரல் போலிருந்தும் உயிர்க்கழுத்தை நெரிக்கும்
உருக்குலைந்த உருவம் உனை உலகம் கூட வெறுக்கும்.

இருவிரலின் ஆதரவில் அது ஆட்சியமைக்கும்
இது மட்டும் இன்பம் என்றே அது காட்சியமைக்கும்
இதழ்களில் ஏறி இதயம் வரைக்கும் அதுவாயே தாவி- உன்
இறப்பின் காரணம் தான் என சாட்சியுமளிக்கும்.

முச்சில் பயணம் தொடக்கும் முழு வழியும் அடைக்கும் -குருதி
பாய்ச்சும் குழாய்களிற்கும் கொடிய நச்சை கொடுக்கும்
ஏய்ச்சு விடும் வயதில் இருபாலாரையும் தாக்கும் -அது
இறுதி வரை இன்பமாக்கி தன் வழியில் மேய்க்கும்.

பக்கெட்டின் உள்ளே பளிச்சிடும் பல்குழல்
நிக்கொட்டின் நச்சை நிரப்பிய நீள்குழல்
திக்கெட்டும் தடையின்றி கிடைக்கும் தீக்குழல்
உயிர்க்கெட்டும் தூரத்தில் உலவிடும் சாவின் நிழல்.

புரிந்து கொள்வோம் புகைப்பிடிப்பை விட்டொழிப்போம்
புது முயற்சி எடுப்போர்க்கும் புத்திமதி சொல்லிவைப்போம்
புரியாமல் தொடர்வோர்க்கும் புரியும் படி சொல்வோம்
புகையில்லா புது உலகை நாம் சேர்ந்தே வெல்வோம்.

             பிரியமுடன் பிரகலாதன்.
                  31 : 05 : 2015.

Tuesday, March 3, 2015

உறுதியான தீர்மானம்

எந்த உன் ஒரு தீர்மானத்திற்கும் அன்பொன்றே அடித்தளமாகட்டும்.நீதி அதன் மேல் தூண்களாகட்டும், அறிவொன்றே எப்போதும் அதன் கூரையாகட்டும்.உறுதியான நிர்மாணம் உன் தீர்மானம்.

என் அம்மா

ஒளி படும் இடத்தில் எனை நிறுத்த
விழி இமை மூடாது தனை ஒறுத்தாள்
பழி,புகழ்,பணம் எனை நெருங்கவிடா
வழிகளில் எனை அவள் வளர்த்துவிட்டாள்.

Wednesday, February 25, 2015

வாழ்வியல்.

விட்டுக்கொடுப்புகள் வாழ்வின்
வெற்றித்தொடுப்புக்கள்.