நிறைவான வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கு
நேசத்தின் சிந்தனையை நெஞ்சில் செதுக்கு
நிகழ்கால கடமைகளை நொடிக்குள் அடக்கு
எதிர்கால கடமைதனை இன்றே தொடக்கு
இன்றில் நீ இனிதாக வாழப் பழகு - இனி
நாளையும் உனதாக்கி ஆளப்பழகு
எதைத்தான் கண்டாய் இதுவரை அழுது,
இருப்பதைக் கொண்டெழு இறைவனைத்தொழுது
துணிந்து விடு எதிலும் தொடர்ந்து செயல்படு
விடிந்துவிடும் உலகமும் உன்னோடு.
பிரகலாதன்.