Sunday, April 14, 2019

மண்ணுலகின் மைந்தன்.

மார்கழியில் மரியின் மைந்தன்
மண்ணுலகில் பிறந்தார்.
தேவதூதன் சொன்னது போல்
தேவமைந்தன் உதித்தார்.
புல்லணையில் பாலகனாய்
புவியின் நேசன் பிறந்தார்.
அல்லலுறும் மக்கள் துன்பம்
அகற்றிடவே பிறந்தார்.
எல்லையில்லா நேசம் தனை
எல்லோருக்கும் தந்தார்.
நல்ல நல்ல பிள்ளைகளாய் நாம்
வளர வழியும் சொன்னார்.
அன்பு கொண்டு அனைவரையும்
அன்பு செய்ய சொன்னார்.
மண்ணில் நல்ல வண்ணம் மக்கள் வாழ
விண்ணில் வல்ல தேவன் மகிமை சூழ
என்னில் உன்னில் உள்ள அன்பு கூட
எங்கள் இயேசு பாலன் இங்கு பிறந்தார்.
தந்தையோடு மைந்தன் இவர் சேர்ந்ததினாலே
விந்தைமிக்க ஓர் இனமாய் நாமும் உயர்ந்தோமே.
இரட்சகராம் இயேசுவையே
எந்த நாளும் துதிப்போம்.
மண்ணில் உதித்த மன்னவன் அவர்
சொன்ன வழியில் நடப்போம்.
-பிரகவி.

No comments:

Post a Comment