Sunday, April 14, 2019

புத்தகம் எடு புதுயுகம் தொடு.

& புத்தகம் எடு புதுயுகம் தொடு &

நித்தமும் ஒரு புத்தகம் வாசி இந்த
நித்திலம் சிறக்கும் நீ அதை யோசி.
சத்தியமாய் எல்லாம் சாத்தியமாகும்
ஒரு புத்தகம் போதும் உலகமே மாறும்.

தெருவிலே படித்தாலும் தலைவனாய் ஆகலாம்-நூல்
உருவிலே உந்தன் ஆளுமை வளர்க்கலாம்.
கருவிலே குழந்தையை சுமந்திடும் தாய்கூட
உருவாகும் குழந்தையை உலகாள வைக்கலாம்.

பாதைக்கு ஒளியூட்ட விளக்கு வேண்டும்-பாரில்
மாந்தர்க்கு அறிவூட்ட நூல்கள் வேண்டும்.
நீதியாய் நேர்மையாய் நெறிமுறை வாழ்விலே
சாதிக்க வேண்டும் நல்நண்பன் எனும் புத்தகங்கள்.

நாளிதழ் படிக்கையில் அந்த நாளில் ஒரு புத்துணர்ச்சி
நாளும் ஏதும் படிக்கையில் வாழும் வாழ்விலும் அதே மலர்ச்சி.
தேடலுள்ள வாழ்வில்தான் தித்திப்பு இருக்கும்
தேடித்தேடி வாசிப்போம் வாழ்வும் புத்துயிர்ப்பாய் இருக்கும்.

நூல்களை வாசிப்போம் நால்வருக்கு அதை பகிர்வோம்.
நூலகங்கள் எல்லாமே நூல்களின் ஆலயம் ஆக்குவோம்.
சாலைகள் தோறும் வாசிகசாலைகள் அமைப்போம்
சரித்திரம் படைத்திடும் புத்தகப்புரட்சி செய்வோம்.

-பிரகவி.




.

No comments:

Post a Comment