Saturday, September 15, 2012
மழலை இன்பம்
மழலை இன்பம்
எந்த கடவுளும் இதுவரை சொன்னதில்லை
தன்னை சத்தமிட்டு துதி என்று
எந்த குழந்தையும் இதுவரை சொன்னதில்லை
தன்னை முத்தமிட்டு மகிழ் என்று
ஏழையின் சிரிப்பிலே இறைவனை காணலாம்
மழலையின் சிரிப்பிலே இறைவனை உணரலாம்
குழலதன் இனிமையில் மனமது மறக்கலாம்
மழலையின் மொழியிலே மறுபடி பிறக்கலாம்
விழுகையின் போதும் அழுகையின் போதும்
குழந்தை அனுபவம் பெறுகிறது
எழுகையின் போதும் உவகையின் போதும்
நமக்கது அனுபவம் தருகிறது
படைத்தவன் இருதயம் படிப்பவன் மூளை
மேதையின் விழிகள் பேதையின் செவிகள்
பிரசங்கி மொழிகள் பிரபஞ்சமே அதன் வழிகள்
இது மழலையின் மகத்துவம் மனிதரில் தனித்துவம்
உன்னை தந்த இறைவன்
தன்னை காண்பிக்கிறான் இங்கு
அன்னையும் நீயுமே என்றும்
ஆண்டவனின் முழுமைப் பங்கு
R.J.பிரகலாதன்
உடுவில்
Subscribe to:
Posts (Atom)