Wednesday, June 22, 2011

உன்னைச் செதுக்கு..

உன்னைச் செதுக்கு..

நிறைவான வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கு
நேசத்தின் சிந்தனையை நெஞ்சில் செதுக்கு
நிகழ்கால கடமைகளை நொடிக்குள் அடக்கு
எதிர்கால கடமைதனை இன்றே தொடக்கு
இன்றில் நீ இனிதாக வாழப் பழகு - இனி
நாளையும் உனதாக்கி ஆளப்பழகு
எதைத்தான் கண்டாய் இதுவரை அழுது,
இருப்பதைக் கொண்டெழு இறைவனைத்தொழுது
துணிந்து விடு எதிலும் தொடர்ந்து செயல்படு
விடிந்துவிடும் உலகமும் உன்னோடு.
                                          பிரகலாதன்.

3 comments:

  1. ஜோனி ஒவ்வொரு கவிதையையும் எனது தளத்தில் மறவாமல் இணைத்துவிடும்.தன்னம்பிக்கை தரும் வரிகள்.

    ReplyDelete