Sunday, June 19, 2011

வாழ்கை

                             வாழ்கை

தேடல் கொள் தினம் தித்திக்கும் வாழ்க்கை
ஊடல் கொள் உனை புதிப்பிக்கும் வாழ்கை
நம்பிக்கை வை நலம் தரும் வாழ்க்கை - எதிலும்
நம்பி கை வை சுகம் பெறும் வாழ்க்கை


துணிவு கொண்டெழு தூரமில்லை வாழ்க்கை
பணிவு கொண்டிரு பாரமில்லை வாழ்க்கை
விவேகம் தனை நிறை வளமாகும் வாழ்க்கை
வீண்வேகந்தனைக்குறை உரமாகும் வாழ்க்கை


பொறாமை, புறம்பேசல் பொருத்தமில்லா வாழ்க்கை
பொறுமை, அறம்பேசின் வருத்தமில்லை வாழ்க்கை
திறந்த மனதோடிரு தெவிட்டாது வாழ்க்கை
நிறைந்த மனதோடிரு நிலை பெறும் வாழ்க்கை.


                                                                                             R.J.Prakalathan.

No comments:

Post a Comment