Wednesday, June 8, 2011

அன்னையே உன்னை ஆராதிக்கின்றேன்.

அன்னையே உன்னை ஆராதிக்கின்றேன்.


உண்மை அன்பின் முழு வடிவம்
தொன்மை தொட்டு நாம் தொழும் வடிவம்
என்னை உன்னை இயங்க வைக்க – தன் 
எண்ணம் தன்னை எமக்களிக்கும்
கீதமாய் வாழ்வின் நாதமாய் 
வேதமாய் வேண்டும் யாதுமாய்
என்றும் போதுமாய் உள்ள பூரணம்
பூமியில் பதிந்து விட்ட புதிய சொர்க்கம்

வறுமையின் பிடியிலும் பொறுமையைக் காத்தவள்
சிறுமையின் பிடியிலும் பெருமையைச் சேர்த்தவள்
நெற்றிக்கு முன்னே நியாயம் சொல்பவள் - என்
வெற்றிக்குப் பின்னே உபாயம் சொல்பவள்

குருதியைத் தந்தவள் பாலாக்கி - தினம்
உறுதியைத் தந்தவள் ஆளாக்கி
அன்னையே உன்னை நான் ஆராதிக்கின்றேன் - என்
அகிலமே நீதான் அதை ஆமோதிக்கின்றேன்,
உன்னையே குறளாக்கி ஏறெடுக்கின்றேன் - கவியில் 
என்னையே பொருளாக்கி பேரெடுக்கின்றேன் புவியில்.


                                                                             பிரகலாதன்.

No comments:

Post a Comment