Wednesday, June 22, 2011

கவி யாசி.

கவி யாசி.

அழகை ரசி அதில் அன்பை ருசி
அளவாய் புசி அனைத்தும் நேசி
அகிலந்தனை உரசி அதழல் நீ வசி
அறிவூறத் தினம் தேடி வாசி - நல்
நெறி முறையை நீ நாடி யாசி
உலகம் கிடக்குது பொய்மையைப் பூசி
உடனே உடைத்தெறி நீ வாய்மையின் ஊசி
அன்னை என்பவள் உனக்கொரு காசி
அவளை வணங்கிவிடு அகன்றிடும் தூசி
ஆழமாய் யோசி குறு நீளமாய் பேசி
அனைவர் மனதிலும் அகல்விளக்காய் வசி.

No comments:

Post a Comment