நடை.
உலகின் நடை உணர்ந்த பின்னே
உனது நடை உணர்ந்து நட
அடையும் இடம் தெளிந்த பின்னே
இடையில் தடம் நெளிவதில்லை,
அறிவின் வழி நடந்த பின்னே - நெறி
பிறழ்வின் வழி தொடர்வதில்லை,
முடிவிதென்று தெரிந்த பின்னே
துணிவதொன்றே தரும் பலனை
துணிந்தவுடன் தொடங்கிவிடு செயலனைத்தும் - அதில்
தினம் பற்றுதல் வந்துவிடும்
தொடர் வெற்றியைத் தந்துவிடும்.
R.J.Prakalathan.
No comments:
Post a Comment