Thursday, April 5, 2012

காதல் காட்டும் வேலை

காதல் காட்டும் வேலை

இருட்டில் திருட்டாய் - உயிரை
அருட்டும் காதல் - இரு
இதயம் திரட்டும் அதை
முதலில் மிரட்டும் - பின் 
இமைகள் திறக்கும் அதன் வழி
இதயம் பறக்கும் - காதல்
விழிவழி நுழையும் விதிவரை அலையும்
முடிவது புரிந்தும் முழுவதும் இனிக்கும்
இதுதான் வாழ்க்கை என அது காட்டும்
இருவரை இயக்கியே ஒருபடம் ஓட்டும்
ஒரு வரி வாழ்க்கையை ஒருயுகம் ஆக்கும்
உடன் பிறந்தோரையும் புது முகம் ஆக்கும்
உணர்ந்திட முன்பே உயிர்வரை தாக்கும் 
உணர்ந்திட முடியா பயிரிலும் பூக்கும்
விருந்ததை அருந்த முடியாமல் வருந்தும்
விரும்பியே மனமும் திரும்பவும் பொருந்தும்
திருத்தவே வழி தேடி வருந்துது மூளை
திரும்பவும் காதல் காட்டுது வேலை
முடிவது தேடியே முழு உலகமும் ஓடுது
முடிவதே இல்லை என காதலும் தான் பாடுது


R.J.பிரகலாதன் 
உடுவில்

2 comments:

  1. "..உடன் பிறந்தோரையும் புது முகம் ஆக்கும்
    உணர்ந்திட முடியா பயிரிலும் பூக்கும்.."
    அருமையான வரிகள்

    ReplyDelete