Thursday, April 5, 2012

அழகு நீ பழகு

அழகு நீ பழகு

புல்லில் பூத்த பனி நீ - தமிழ்
சொல்லில் வார்த்த கவி நீ
கல்லில் தெரிந்த சிலை நீ
துள்ளித்திரிந்த கலை நீ


வில்லைப் போலே வளைவாய்நீ - மன 
கொல்லைப் புறமாய் நுழைவாய் நீ
இல்லை போ என்றால் குழைவாய் நீ - ஒரு
வெள்ளைக் கனவாய் பொழிவாய் நீ


முல்லை மலரின் உறவா நீ
மல்லிகையவளின் மகளா நீ
புள்ளியில் தெரிகின்ற வானமா நீ
வெள்ளியில் விரிகின்ற கானமா நீ


பிள்ளைப்ப பருவ குறும்பு நீ
எல்லையில்லா இன்பக் கரும்பு நீ
தொல்லை பண்ணும் அழகு நீ
இல்லை என்னாது பழகு நீ


R.J.பிரகலாதன்
உடுவில்

No comments:

Post a Comment