Thursday, April 5, 2012

ஜெனிவா பேசு துணிவாய்

ஜெனிவா பேசு துணிவாய்


இறுகிய முகங்களும் உருகிய மனங்களும்
திருகிய செவிகளும் மருகிய விழிகளும்
கருகிய முடிகளும் குறுகிய கைகளும்
உறுமிய வெடிகளால் குருதியில் கால்களும்
பொருமிய நெஞ்சமும் புழுதியில் தஞ்சமும்
இருமிய படியே இன்னும் வறுமையில் நாங்கள்
ஒருமுறை குரல் தனைக் காட்டுங்கள் நீங்கள்.


R,.J.பிரகலாதன் 

No comments:

Post a Comment