ஜெனிவா பேசு துணிவாய்
இறுகிய முகங்களும் உருகிய மனங்களும்
திருகிய செவிகளும் மருகிய விழிகளும்
கருகிய முடிகளும் குறுகிய கைகளும்
உறுமிய வெடிகளால் குருதியில் கால்களும்
பொருமிய நெஞ்சமும் புழுதியில் தஞ்சமும்
இருமிய படியே இன்னும் வறுமையில் நாங்கள்
ஒருமுறை குரல் தனைக் காட்டுங்கள் நீங்கள்.
R,.J.பிரகலாதன்
No comments:
Post a Comment