Tuesday, February 26, 2019

கார்த்திகையின் பார்த்தீபன்கள்

தேசம் சார்ந்த உங்கள் நேசம் பெரியது
திரும்பிவந்த செய்திகளும் வெற்றுடலும் உங்கள் தியாகம் சொன்னது
வேசம் இல்லா வீரமிகு மறவர்கூட்டம்
பாசமிகு தாயகத்தின் விடுதலையே நாட்டம்
தேசத்தின் சுத்தமதை சித்தமெனக்கொண்டு-தம்
தேகத்தின் ரத்தமதை மொத்தமுமாய் தந்தவர்கள் நீங்கள்.
உங்களின் லட்சியங்கள் இனி எங்களுடையது.
உங்களின் கனவுகளும் இனி எங்களுடையது.
உங்களின் வழிகளில் இனி நாங்கள்
ஒளிவிளக்கென வழிகாட்டவேண்டும் நீங்கள்.
உயிர்த்தியாகம் உயர் தியாகம்
துயர்கனத்த இதயத்தோடு துதிக்கின்றோம் உமை நாளும்.
#துயிலும் தூயவர்கள்.
-பிரகவி

No comments:

Post a Comment