Friday, February 15, 2019

உழவே தலை

           $ உழவே தலை $

பயிர் வளர்க்க மறந்தோம்- தினம்
வயர்களுடன் இருந்தோம்- இதை
வளர்ச்சி என்றே நினைத்தோம்-ஆனால்
வளர்ச்சி என்பது உயர்ந்து செல்வது
வளைந்து சரிவது வளர்ச்சியல்ல
வீழ்ச்சிக்கான முன்னோட்டமே என
விஞ்ஞானமே வந்து சொன்னாலும் அதை விருப்பிடுவோம்,பகிர்ந்திடுவோம்
இறுதிவரை விளங்கிக்கொள்ள மாட்டோம்

உழவே தலை அதில் உழைக்க தலைப்படு
பயிர்செய் அது நாளை  உயிர்காக்கும்.
வேளான்மை தான் என்றும் மேன்மை
விளங்கிவிட்டால் தேசம் காணும் நன்மை.
உக்கும் கழிவை கொண்டொரு உரம்செய்
மக்கும் யாவையும் மண்ணிற்கே ஸ்திரம்.
நிற்கும் பயிர்களிற்கு நீ அதை உரமாக்கு
நாளை அது உந்தன் வாழ்வை ஸ்திரமாக்கும்.
மண்புழு ஓணான் செண்பகம் வரட்டும்
மண்ணிற்கு அவற்றின் சேவையை தரட்டும்.
என்றிவை இங்கு இல்லாமல் போகுமோ
அன்றைக்கு தொடங்கிடும் மண்ணின் அழிவு.
என்றைக்கும் நினைவில் வை இயற்கையே தோழன்.
இஷ்டப்படி செயற்பட்டால் இயற்கைதான் காலன்.
தன்னிறைவென்பது மண்ணில்தான் சாத்தியம்
உண்மையாய் செய்தால் உழவிலும் நிறைவுவரும்.

-நன்றி
R.J.பிரகலாதன்.

No comments:

Post a Comment