நேற்றிரவு ஓர் கனவு
நீதான் அங்கும் நின்றிருந்தாய்.
நீலக்கண்ணில் நிலவும் நானும் தெரிந்தோம்
நீதான் கேட்டாய் நிலவை நோக்கி
நாங்கள் உலவுமிடத்தில் உனக்கென்ன வேலை என்று.
நிலவோ மௌனம் நான் தான் பதில் தந்தேன்
உலவும் இடத்தில் உன்னோடு துணைவர
உன் அழகில் இல்லையெனினும் ஓரளவில் அழகாய் ஒரு தோழி உண்டென்றால் உனக்கும் ஓர் துணிவென்றேன்.
உன் நீள்விழிப்பார்வை வாள் என வீசி பின் வாய் மலர்ந்தாய்.
உன் மேல் நான் கொண்ட நம்பிக்கையே என் ஒரே துணிவும் துணையுமென்றாய்
மறுமொழி ஒரு மொழி பேச துணிவின்றி தூங்கிவிட்டேன்.
அர்த்தசாமத்திலும் அழியாக்காதலின் அர்த்தம் அழியவில்லை அழகாய் சொன்னாய் 'நம்பிக்கை அதானே எல்லாமே' .
..பிரகலாதன்.
28.09.2015
Wednesday, September 30, 2015
அழியாக்காதல்
Labels:
Prakalathan.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment