பொறுமை கடலினும் பெரிது
தருமே மனிதரில் தனிச்சிறப்பு.
பெருமை இதன் வழி வருமே
இரண்டும் மனதிற்கிதமே.
பொறுமையை பொதுக்குணமாய் கொண்டு விடு
பூமியைக்கூட நீ ஆண்டு விடு
பணிவினை உன்னிடம் செதுக்கிக்கொள்
பெருமையை ஓர் பதக்கமாய் கொள்.
புறந்தள்ளும்போதும் பொறுமை கொள்- பின்
புதையலாய் வெளிப்பட்டு பெருமை கொள்.
அறந்தாண்டி நடப்போர்க்கும் அதிகாரம் வகிப்போர்க்கும்
அழிவுண்டு என்பதை அடிக்கடி நினைவூட்டும் உன் பொறுமையும் பெருமையும்.
தோழனே துயர்விலக்கு தோல்வியிலும் மிஞ்சியுண்டு ஓர் இலக்கு
நாளைய வெற்றிக்கு அதுதான் விளக்கு
துணிவைச்சேர் தொடர்ந்து பணி செய்
சாமியே தோற்கும் உன் சகிப்பில் பூமியும் தோற்கும் பகை தன் பிழை ஏற்கும்
தோழனே துயர்விலக்கு தோல்வியிலும் மிஞ்சியுண்டு ஓர் இலக்கு
நாளைய வெற்றிக்கு அதுதான் விளக்கு.
ஆர்.ஜே.பிரகலாதன்.
No comments:
Post a Comment