Thursday, February 11, 2021

மலரும் வாழ்வும்


               மலரும் வாழ்வும்

ஒருநாள் மட்டும் உலகில் வாழும்
ஒரு பூவின் வாழ்வை பார்.
திருநாள் போலே தினமதில் முழுதாய்
சிரித்தே சிறக்கும் வாழ்வை பார்.
வெயிலோ மழையோ வேறெந்த இன்னலோ
வந்தும் வாடா முகத்தை பார்.
காம்பை விட்டுப்பிரிகையிலும் அது காட்டும் புன்னகை ஒளிதனை கண்கொண்டு பார் -அது
கற்றுத்தருவது ஒன்றே ஒன்றுதான்
கஷ்டம்,துன்பம் எதுவாகிலும் நஷ்டம் நீ அதை அனுமதித்தால் தான் வரும்.
புன்னகை கொண்டு இந்தப்புவிமேலே நின்று
ஒரு பூவினைப்போல் வாழ்வை வென்றுவிடு.
-பிரகவி.

No comments:

Post a Comment